ராசிபுரத்தில் அதிமுக வழக்கறிஞர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை தீபாவளி கிப்ட் வழங்கினர்.
Rasipuram King 24x7 |18 Oct 2024 1:17 PM GMT
ராசிபுரத்தில் அதிமுக வழக்கறிஞர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை தீபாவளி கிப்ட் வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஆனது அமைந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தின் அருகே முன்னாள் அரசு வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் தங்கதுரை, மற்றும் மகளிர் அணி வழக்கறிஞர் ராதா சந்திரசேகரன், ஆகியோர் ஏற்பாட்டின் தலைமையில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் வழக்கறிஞர்களுக்கு அதிமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர்கள் வழங்கினர். அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு வழக்கறிஞர்களுக்கு பட்டாசு பெட்டிகள்,டைரி உள்ளிட்டவை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள், என பலர் கலந்து கொண்டனர்...
Next Story