ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் இடமாற்றம் சம்பவம் குறித்து வழக்கறிஞர்களிடம் அதிமுக., சசிகலா சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கோபால் ஆதரவு கேட்டு கோரிக்கை மனு

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் இடமாற்றம் சம்பவம் குறித்து வழக்கறிஞர்களிடம்  அதிமுக., சசிகலா சார்பில்  மாவட்ட பொறுப்பாளர் கோபால் ஆதரவு கேட்டு கோரிக்கை மனு
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் இடமாற்றம் சம்பவம் குறித்து வழக்கறிஞர்களிடம் அதிமுக., சசிகலா சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கோபால் ஆதரவு கேட்டு கோரிக்கை மனு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் ஏரி அருகே இடமாற்றம் செய்வதைக் கண்டித்தும், அணைப்பாளையம் ஏரியில் ராசிபுரம் அரசு தன்மை மருத்துவமனை கட்டிடம் கட்டி வருவதை கண்டித்தும் ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம், ராசிபுரம் உரிமையியல் நீதிமன்ற வழங்கறிஞர்கள் சங்கம், ராசிபுரம் தாலுக்கா சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞ சங்கம் மற்றும் ராசிபுரம் உரிமையியல் நீதிமன்ற இளம் வழங்கறிஞர்கள் சங்கத்திடம் கோரிக்கை மனு வழங்கி ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தக்கோரி தமிழ்நாடு பாண்டிச்சேரி சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளரும், ராசிபுரம் சிவில் மற்றும் கிரிமினல் சங்க தலைவர் காமராஜ், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வாசுதேவன், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் தங்கதுரை, ராசிபுரம் சிவில் மற்றும் கிரிமினல் சங்க செயலாளர் சந்திரசேகர், உரிமையியல் நீதிமன்ற சங்க செயலாளர் சதீஷ்குமார், உரிமையியல் இளம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் வேலுசாமி, சிவக்குமார், மணிகண்டன் ஆகியோரிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சசிகலா அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால், நகர பொறுப்பாளர் வேலுசாமி, வெண்ணந்தூர் பேரூர் பொறுப்பாளர்கள் மணிவாசகம், மணிகண்டன், ராமசாமி, ரத்தினம், கோவிந்தராஜ் ஆகியோர் ஆதரவு கேட்டு மனு வழங்கினர். தொடர்ந்து அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், பொது மக்களுக்கு பயன்பெறக்கூடிய வகையில் அமைந்திட ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் என். கோபால் கேட்டுக்கொண்டார்.
Next Story