கபிலர்மலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டு நீர் பாசனம்.

கபிலர்மலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டு நீர் பாசனம்.
கபிலர்மலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலைத் துறை அறிவிப்பு.
பரமத்தி வேலூர். அக். 18: கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சின்னத்துரை செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 180 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும் பெருவிவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சொட்டு நீர் பாசனம் அமைக்க பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா. அடங்கல், நில வரைபடம். குடும்ப அட்டை நகல், மண் மற்றும் நீர் ஆய்வு அறிக்கை, ஆதார் அட்டை நகல் வங்கி கணக்கு புத்தகம் நகல், சிறு/குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்கவுள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரமும் புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக் கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் சேகரிப்பு அமைப்பு 116 கனமீட்டர் அளவில் அமைத்திட மானியமாக ரூ.75 ஆயிரம்  வழங்கப்படும் என  கபிலர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சின்னத்துரைதெரிவித்துள்ளார்.
Next Story