இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் இராமாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி தூண்கள் சேதமடைந்து இருப்பதால் இடிந்து விழும் அபாயம் இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சந்திர விலாசபுரம் ஊராட்சியில் உள்ள இராமாபுரம் 50 குடும்பங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள பொது மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.

இந்நிலையில் நீர்த்தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் தூண்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. தூணில் உள்ள சிமெண்ட் பெயர்ந்து உள்ளிருக்கும் கம்பி வெளியே தெரிகிறது.



இதனால் நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் இருப்பதாக ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் இராமாபுரம் வசிக்கும் மக்களுக்கு அசம்பாவிதம் ஏற்படும் முன் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story