விருத்தாசலம் அருகே தரைப்பால தடுப்பு கட்டையில் மோதி வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து

விருத்தாசலம் அருகே தரைப்பால தடுப்பு கட்டையில் மோதி வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து
பெண் உள்ளிட்ட இருவர் பலி, மூவருக்கு தீவிர சிகிச்சை
பெங்களூர், கெங்கேரி பகுதியைச் சேர்ந்தவர் பேட்ரிக்(50), அவருடைய மனைவி நீத்திகா (43), மகள்  ஆதியா (17), அவருடைய சித்தப்பா உன்னிகிருஷ்ணன் (79), சித்தி கங்காலக்ஷ்மி (68) ஆகியோர் காரில் குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு இன்று சென்று கொண்டிருந்தனர். காரினை பேட்ரிக் ஒட்டிச் சென்றார். கடலூர் மாவட்டம்,கம்மாபுரம் அடுத்த சாத்தப்பாடி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென, சாலையோர தரைப்பாலக் கட்டையில் மோதி வாய்க்கால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உன்னிகிருஷ்ணன் மனைவி கங்காலக்ஷ்மி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் கிடைத்து விரைந்து சென்ற கம்மாபுரம் போலீசார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பேட்ரிக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தில் இறந்த கங்கா லட்சுமியின் உடல் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், பேட்ரிக் உடல்  முண்டியம்பாக்கத்திலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story