விருத்தாசலத்தில் தீ விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருத்தாசலத்தில் தீ விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ரோட்டரி சங்கம் சார்பில் நடந்தது
விருத்தாசலம் தீயணைப்பு துறை மற்றும் விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் ஆனந்தா லாட்ஜ் அசோக்குமார் தலைமை தாங்கினார், செயலாளர் பேராசிரியர் பரமசிவம், திட்ட தலைவர் ராஜா, பொருளாளர் ஆடுகளம் பிரசன்னா, சி எஸ் சி பிரகாஷ் ராஜா, குமார், எலைட் சங்க உறுப்பினர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பொது மக்களுக்கு தீ விபத்து தடுப்பு, இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி, மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் காப்பாற்றுவது எப்படி, உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
Next Story