நாமகிரிப்பேட்டை அருகே சாராயத்திற்கு ஊறல் போட்ட முதியவர் கைது..
Rasipuram King 24x7 |19 Oct 2024 11:54 AM GMT
நாமகிரிப்பேட்டை அருகே சாராயத்திற்கு ஊறல் போட்ட முதியவர் கைது..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே சாராயத்திற்கு ஊறல் போட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஒன்பதாம்பாலிக்காடு பகுதியில் சாராய ஊறல் போடுவதாக ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஒன்பதாம்பாலிக்காடு பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ராசிபுரம் அடுத்த அணைப்பாளையத்தை சேர்ந்த இருளப்பன் மகன் ரங்கசாமி, 74 வேளாண் நிலத்தில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்ட மூலப்பொருட்களை தயார் செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரங்சாமியை கைது செய்ததுடன், 10 லிட்டர் ஊறலை கொட்டி அழித்தனர்.
Next Story