தாளவாடி அருகே கர்நாடக மாநில மதுப்பாக்கெட்டுகள் பறிமுதல்-இருவர் மீது வழக்கு பதிவு

தாளவாடி அருகே கர்நாடக மாநில மதுப்பாக்கெட்டுகள் பறிமுதல்-இருவர் மீது வழக்கு பதிவு
தாளவாடி அருகே கர்நாடக மாநில மதுப்பாக்கெட்டுகள் பறிமுதல்-இருவர் மீது வழக்கு பதிவு
தாளவாடி அருகே கர்நாடக மாநில மதுப்பாக்கெட்டுகள் பறிமுதல்-இருவர் மீது வழக்கு பதிவு ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மகாராஜனபுரம் வன சோதனை சாவடியில் தாளவாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சட்டவிரோதமாக கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனைக்காக எடுத்து வந்த நெய்தாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மற்றும் நாகேஷ் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 96 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story