நடிகர் விஜய் மாநாட்டிற்கு சத்தியில் இருந்து நடந்தே செல்லும் ரசிகர்

நடிகர் விஜய் மாநாட்டிற்கு சத்தியில் இருந்து நடந்தே செல்லும் ரசிகர்
நடிகர் விஜய் மாநாட்டிற்கு சத்தியில் இருந்து நடந்தே செல்லும் ரசிகர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி பகுதியில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தற்போது நடை பெற்று வருகிறது. விஜய் மாநாடு ஹரிஹரசுதன். குறித்து அறிவித்தது முதல் அதில் கலந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்து வந்தனர். மேலும் அவர்கள் மாநாட்டிற்கு செல்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ள சத்தி, அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய்யின் தீவிரரசிகரான ஹரிஹரசுதன் என்பவர் மாநாட்டிற்கு நடந்தே செல்வதாக கூறி வந்துள்ளார். நேற்று சத்தியில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் உள்ள விஐய்யின் மாநாடு நடை பெறும் இடமான விக்கிரவாண்டியை நோக்கி கையில் கொடியுடன் நடந்தே சென்றார். அவரின் உற்சாகமான நடையை பார்த்த பலரும் அவருடன் செல்பி எடுத்தனர். இவர் தனி ஒருவனாக நடந்து செல்லும் காட்சி அடங்கிய வீடியோதற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Next Story