சாதிவாரி கணக்கெடுப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்? கரூரில் சீமான் கேள்வி.

சாதிவாரி கணக்கெடுப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்? கரூரில் சீமான் கேள்வி.
சாதிவாரி கணக்கெடுப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்? கரூரில் சீமான் கேள்வி. கரூரில், நாம் தமிழர் கட்சி சார்பில் மக்களுடன் சந்திப்பு, மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கரூரில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்று அக்டோபர் 21ஆம் தேதி காலை வந்தார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதனைத் தொடர்ந்து தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் நாடு " என்று வந்ததாலேயே அது தமிழ் தாய் வாழ்த்தா? எனவும் கேள்வி எழுப்பினார். நான் ஆட்சிக்கு வந்தால் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய பாடலையே தமிழ் தாய் வாழ்த்து ஆக மாற்றுவேன் என தெரிவித்தார். மேலும், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்த சீமான், பெரியாரைப் பேசாத மாநிலமான பீகாரில், நிதீஷ் குமார் ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுத்து விட்டார். நீங்கள் ஏன் இன்னும் எடுக்கவில்லை எனவும், ஒவ்வொரு சமூகத்திற்கும் இவ்வளவு என்று கணக்கெடுத்து எண்ணி கொடுங்கள். எதற்கு அள்ளிக் கொடுக்கிறீர்கள். சாதிவாரி கணக்கெடுப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்? எனவும் கேள்வி எழுப்பினர்.
Next Story