மண்மங்கலம் அருகே டூவீலர்கள் மோதல். மூன்று பேர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

மண்மங்கலம் அருகே டூவீலர்கள் மோதல். மூன்று பேர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
மண்மங்கலம் அருகே டூவீலர்கள் மோதல். மூன்று பேர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, கடம்பன்குறிச்சி, பால்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 55. அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் வயது 50. இவர்கள் இருவரும் அக்டோபர் 20ஆம் தேதி இரவு 10 மணி அளவில் கரூர்- சேலம் தேசிய நெடு்ஞ் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். டூவீலரை தங்கவேல் ஓட்ட, முருகேசன் பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் மன்மங்கலம் பகுதியில் செயல்படும் அரசு பஸ் டிப்போ அருகே சென்றபோது, அதே சாலையில், அருகில் உள்ள வள்ளிபாளையம், அம்பாள்நகரை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் விக்னேஷ் வயது 26 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் தங்கவேல் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி, இரண்டு வாகனங்களும் சாலையில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். மூவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தங்கவேலை கரூர் அமராவதி மருத்துவமனையிலும், முருகேசனை மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும், விக்னேஷை மண்மங்கலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக தங்கவேல் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வேகமாக டூவீலரை வேகமாகவும், கவன குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story