மாயனூர் பாலம் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.
Karur King 24x7 |22 Oct 2024 8:09 AM GMT
மாயனூர் பாலம் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.
மாயனூர் பாலம் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, கருப்பத்தூர் அருகே உள்ள கே. புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் வயது 34. மாயனூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி ஜெயலட்சுமி வயது 36. இவர்கள் இருவரும் அவர்களது டூவீலரில் அக்டோபர் 20ஆம் தேதி காலை 11 மணியளவில் திருச்சி- கரூர் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் மாயனூர் பாலம் அருகே வந்தபோது, எதிர் திசையில் மாயனூரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் யுவராஜ் வயது 26 என்பவர், கரூர் காந்திகிராமம் TNHB காலனியைச் சேர்ந்த நல்லையன் வயது 84 என்பவரை தனது காரில் அமர வைத்து, வேகமாக ஓட்டி வந்த கார், ஜெயக்குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜெயக்குமார் மற்றும் நல்லையன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.
Next Story