அமராவதி பாலத்தில் டூவீலர்கள் மோதல். இளைஞர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

அமராவதி பாலத்தில் டூவீலர்கள் மோதல். இளைஞர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
அமராவதி பாலத்தில் டூவீலர்கள் மோதல். இளைஞர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், அருணாச்சல் நகர், 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சந்தோஷ் குமார் வயது 21. இவர் அக்டோபர் 20ஆம் தேதி காலை 10 மணி அளவில், திருமாநிலையூரில் இருந்து கரூர் செல்லும் அமராவதி பாலத்தில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அமராவதி பாலத்தில் 14வது தூண் அருகே வந்த போது, எதிர் திசையில் கரூர்,வடக்கு காந்திகிராமம், ஜே ஜே கார்டன் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி சங்கவி வயது 27 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் சந்தோஷ் குமார் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சந்தோஷ்குமாருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சந்தோஷ்குமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய சங்கவி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story