மக்கள் மார்ட் அருகே சகோதரனுடன் டூவீலரில் சென்ற இளம்பெண் கீழ விழுந்து விபத்து

மக்கள் மார்ட் அருகே சகோதரனுடன் டூவீலரில் சென்ற இளம்பெண் கீழ விழுந்து விபத்து
மக்கள் மார்ட் அருகே சகோதரனுடன் டூவீலரில் சென்ற இளம்பெண் கீழ விழுந்து விபத்து. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், முல்லை நகர் 7வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் வயது 34.இவரது மனைவி பத்மலட்சுமி வயது 26. பத்மலட்சுமி தனது சகோதரன் பேச்சிமுத்து வயது 28 என்பவருடன் அக்டோபர் 19ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில் வேலாயுதம்பாளையத்தில் இருந்து கொடுமுடி செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். டூவீலரை பேச்சிமுத்து ஓட்ட, பத்மலட்சுமி பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் வேலாயுதம்பாளையம் மக்கள் மார்ட் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பத்மலட்சுமிக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக பாலமுருகன் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை கவனக்குறைவாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய பேச்சிமுத்து மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story