பண்டுதான்காரன் புதூர்- மகள் காதலனுடன் சென்றதால் மனம் உடைந்த தாயார் தூக்கிட்டு தற்கொலை.

பண்டுதான்காரன் புதூர்- மகள் காதலனுடன் சென்றதால் மனம் உடைந்த தாயார் தூக்கிட்டு தற்கொலை.
பண்டுதான்காரன் புதூர்- மகள் காதலனுடன் சென்றதால் மனம் உடைந்த தாயார் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், பழைய சுக்காலியூர் அருகே பண்டுதகாரன் புதூரைச் சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி தனலட்சுமி வயது 46. இவரது மகள் பிரியதர்ஷினி என்பவர் அக்டோபர் 20ஆம் தேதி இரவு 11 மணி அளவில், வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். இந்த சம்பவத்தை யோசித்த தனலட்சுமி தனது மகள் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த நவீன் என்பவர் உடன் காதல் கொண்டிருந்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக கருதினார். இதனால் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்த தனலட்சுமி அக்டோபர் 21ஆம் தேதி தனது வீட்டில் நள்ளிரவு ஒரு மணியில் இருந்து காலை 6 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் நெடுநேரம் ஆகியும் தனது மனைவி வழக்கம் போல் தனது பணியை துவக்கவில்லையே என நினைத்து வீட்டிற்குள் சென்று பார்த்த அவரது கணவர் இளங்கோவன் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது தொடர்பாக காவல் துறையினருக்கு அளித்த புகார் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த தனலட்சுமி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர். மகள் காதலனுடன் சென்றதால், மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story