காங்கேயத்தில் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் - முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் பங்கேற்பு

காங்கேயத்தில் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் - முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் பங்கேற்பு
காங்கேயம் ஒன்றிய அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய கழக செயலாளர் என்.எஸ்.என்‌. நடராஜ்தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் மற்றும் கிணத்துக்கடவு சட்ட உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி, காங்கேயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான கழக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் இன்று காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள என்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அதிமுக காங்கேயம் ஒன்றிய கழக செயலாளர் என்.எஸ்.என்‌. நடராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் மற்றும் கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மேலிட பார்வையாளருமான தாமோதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.   முன்னால் அமைச்சர்கள் பொள்ளாச்சி வ. ஜெயராமன் மற்றும் தாமோதரன் ஆகியோர் பேசியதாவது:   அதிமுகவின் முன்னால் தலைவர்கள் புரட்சி தலைவர் காமராஜரை போல, புரட்சி தமிழர் எம்.ஜி.ஆரை போல, புரட்சி தலைவி ஜெயலலிதாவை போல நல்லாட்சியை அளித்தவர் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி. ஆரம்ப காலத்தில் எந்தவொரு  தொலை தொடர்பு வசதிகளும் இன்றி கட்சியின் கொள்கைகளை பெரிய அளவில் மக்களிடையே கொண்டு சென்றது நமது கட்சி. அதற்கு காரணம் ஒவ்வொரு தொண்டனும் நமது கட்சியின் வெற்றி குறித்து யோசிக்க வேண்டும், அதன்படி செயலாற்ற வேண்டும். அவ்வாறு நடந்தால் நமது கட்சியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து நமது கட்சியை பெரும் உயரத்திற்கு கொண்டு சென்றவர்கள் சாதாரண தொண்டர்கள் தான். பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் 240 சிறிய தடுப்பணைகளை கட்டி தந்தவர் எடப்பாடி கே. பழனிச்சாமி. 5 மாடியில் பொதுநல மருத்துவமனை, 3 மாடியில் குழந்தைகள் மருத்துவமனை, பள்ளி, நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை கட்டித் தந்தவர் எடப்பாடி கே. பழனிச்சாமி. எனவே மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி வந்தால் பொதுமக்களின் தேவைகள் நிவர்த்தியாகும். இந்த வருடம் 700 மருத்துவர்களை உலகத்திற்கு வழங்க மருத்துவ கல்லூரிகளை கட்டி தந்தவர் நமது பொதுச் செயலாளர். இந்திய அளவில் உள்ள மாநில கட்சிகளில் சிறந்த கட்சி அதிமுக தான். அவ்வாறு நல்லாட்சிகளை தந்தவர் எடப்பாடி கே. பழனிச்சாமி. அவரை மீண்டும் வெற்றி பெற செய்தால் கொங்கு நாடு செழிக்க அவிநாசி அத்திகடவு 2, பாண்டியர் புன்னம்புழா திட்டம், ஆனைமலையாறு நல்லாறு ஆகிய திட்டங்களை நிறைவேற்றுவார். முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் திமுகவை 3ஆம் இடத்திற்கு தள்ளி பெரும் நெருக்கடியை தந்தார். அதே போல் வரும் தேர்தலில் திமுகவை வெற்றி கண்டு அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். எனவே நமது கட்சி வெற்றி அடைய நாம் அனைவரும் அயராது உழைத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கே.ஜி.கே. கிஷோர்குமார், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்கள் எஸ். இளங்கோ, அப்பு @ பழனிச்சாமி, ஒன்றிய அவைத்தலைவர் மைனர் டி. பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் ஏ.என். திருச்செந்தில், ஒன்றிய பொருளாளர் டி. பழனிச்சாமி, பொத்தியபாளையம்  தலைவர் சந்திரசேகர், தம்மரெட்டிபாளையம்  தலைவர் பாலசுப்பிரமணியன், கணபதிபாளையம் தலைவர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி பி.பி. இளங்கோ, மற்றும் நிர்வாகிகள் ,மகளிர் அணியினர் திரளாக என சுமார் 1000க்கும்‌ மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story