புலியூர் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.
Karur King 24x7 |23 Oct 2024 4:05 AM GMT
புலியூர் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம்.
புலியூர் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. மூதாட்டி படுகாயம். கரூர் மாவட்டம், புலியூர், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி மருதாயி வயது 74. இவர் அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 6 மணி அளவில், கரூர்- திருச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புலியூர், கவுண்டம்பாளையம் அருகே உள்ள பழனி முருகன் சர்வீஸ் ஸ்டேஷன் எதிரே நடந்து சென்ற போது, அதே வழியில் வேகமாக வந்த ஒரு டூ வீலர் நடந்து சென்ற மருதாயி மீது மோதி விட்டு, நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த மருதாயிக்கு மூக்கு மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மருதாயி மகன் செல்வம் வயது 55 அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, நடந்து சென்ற மருதாயி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story