வையாபுரி நகர் அருகே நடந்து சென்றவர் மீது லாரி மோதி விபத்து. வாலிபர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

வையாபுரி நகர் அருகே நடந்து சென்றவர் மீது லாரி மோதி விபத்து. வாலிபர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
வையாபுரி நகர் அருகே நடந்து சென்றவர் மீது லாரி மோதி விபத்து. வாலிபர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் வயது 40. இவர் அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 9 :45- மணியளவில், கோவை- கரூர் சாலையில், வையாபுரி நகர் அருகே உள்ள ஜூஸ் கடை 3-வது கிராஸ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் கரூர், கிருஷ்ணராயபுரம், வேங்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் கனகராஜ் வயது 44 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி, நடந்து சென்ற பாலமுருகன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாலமுருகனுக்கு பின்னந்தலை, இடது கண் புருவம் ,வலது காது, வலது கால் தொடை, இடது கால் முட்டி, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலமுருகன் அளித்த புகார் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story