திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியில் உள்ள திருப்பத்தூரிலிருந்து சேலம் செல்லும் சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்மத்தூர் பகுதியை சேர்ந்த குமார் (45),அவரது மனைவி சத்யா(36) ஆகியோர் அவர்களது உறவினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருந்து உள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் அவரது மனைவி சத்யா பலத்த படுகாயம் அடைந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு விபத்து செய்துவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story