பங்களாபுதூர் அருகே முதியவர் திடீர் சாவு

பங்களாபுதூர் அருகே முதியவர் திடீர் சாவு
பங்களாபுதூர் அருகே முதியவர் திடீர் சாவு
பங்களாபுதூர் அருகே முதியவர் திடீர் சாவு ஈரோடு மாவட்டம் கோபி வெட்டுவான் புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 60). இவரது மனைவி அமுதா (50). முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முருகன் டிஜி புதூர் சத்தி-அதாணி மெயின் ரோட்டில் மயங்கி நிலையில் கிடந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து அவரது மனைவி அமுதா பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story