திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை

திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை
திருச்செங்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை திருச்செங்கோட்டில்கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக பத்திர பதிவு செய்ய வந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு. நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சுபாஷினி தலைமையில் பத்துக்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் அதிரடியாக சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான நபர்கள் பத்திர பதிவு செய்ய வந்திருந்த நிலையில் இன்னும் 50க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் அதற்காக வந்தவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திலேயே காக்க வைக்கப்பட்டு உள்ளனர்.வெளிப்புற கதவை பூட்டு போட்டுவிட்டு உள்ளேயாரும் வரவும் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லவோ அனுமதிக்கப்படாத நிலையில் தீவிரமான சோதனை நடைபெற்று வருகிறது.
Next Story