வனத்துறை பணியாளர்களுக்கு பயிற்சி

வனத்துறை பணியாளர்களுக்கு பயிற்சி
பயிற்சி
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நேற்று புவியியல் நில அளவை குறித்த பயிற்சி துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் வனத்துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நான்கு மாவட்டங்களை சேர்ந்த வனத்துறை களப்பணியாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி மூலம் வனப்பகுதியில் நிலங்களை அளவீடு செய்வது குறித்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பொறியாளர் விக்னேஷ் குமார் கலந்து கொண்டு பயிற்சியை அளித்தார்.
Next Story