நெல் மூட்டையுடன் லாரி கவிழ்ந்து விபத்து

நெல் மூட்டையுடன் லாரி கவிழ்ந்து விபத்து
விபத்து செய்திகள்
கீரனுார்: அறந்தாங்கியில் இருந்து நேற்று காலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு 20 டன் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. லாரியை தர்மபுரி மாவட்டம் கூடலுார் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டினார். புதுக் கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தவ ளைமேடு பிரிவு சாலை அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை யோரம் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகலறிந்ததும் கீர னுார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறப்படுத்தப்பட்டதும் போக்குவரத்து சீரானது.
Next Story