நாமக்கல்: கலைஞர் சிலை அமைப்பு குழு தலைவர் மணிமாறனுக்கு ஒரு பவுன் தங்க மோதிரத்தை அணிவித்தார் முதல்வர்!

சிலை அமைப்பு குழு தலைவரும், மாவட்ட திமுக அவைத் தலைவருமான மணிமாறனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கமோதிரம் பரிசாக அணிவித்து வாழ்த்தினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பரமத்திரோடு செலம்பகவுண்டர் பூங்கா அருகில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முழு உருவச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. 8 அடி உயரம், 3 அடி அகலத்தில், வெண்கல சிலையாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலைஞர் சிலையை திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து சிலை அமைப்பு குழு தலைவரும், மாவட்ட திமுக அவைத் தலைவருமான மணிமாறனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கமோதிரம் பரிசாக அணிவித்து வாழ்த்தினார். இந்த நிகழ்வில் நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, டாக்டர். மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story