பஞ்சமாதேவி அருகே மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை.
Karur King 24x7 |24 Oct 2024 10:28 AM GMT
பஞ்சமாதேவி அருகே மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை.
பஞ்சமாதேவி அருகே மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, பஞ்சமாதேவி அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் கார்த்திக் வயது 42. கடந்த 6- வருடங்களுக்கு முன்பு, வைஷ்ணவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக தனித்தனியாக வசித்து வந்தனர். இதனால் விரக்தி அடைந்த மனநிலையோடு கார்த்திக் வாழ்ந்து வந்த நிலையில், அக்டோபர் 22ஆம் தேதி இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கார்த்திக் தனது வீட்டில் விரக்தியின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை அவரது தாயார் மணி தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story