பெஸ்ட் மெட்ரிக் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெஸ்ட் மெட்ரிக் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆரணி, அக் 24 ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதை என்னும் அரக்கன் என்ற தலைப்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதில் பள்ளி இயக்குனர் ரியாஸ் பர்வீன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் நிர்மல்குமார் அனைவரையும் வரவேற்றார். ஆரணி துணை கண்காணிப்பாளர். வி.கே.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் போதை விழிப்புணர் குறித்து சிறப்புரை ஆற்றினார். மகளிர் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, ஆரணி நகர காவல் நிலைய எஸ்‌ஐ சுந்தரேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story