வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் தீபாவளித் திருநாள் கொண்டாடினர்.
Rasipuram King 24x7 |25 Oct 2024 1:38 PM GMT
வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் தீபாவளித் திருநாள் கொண்டாடினர்.
வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவர்களால் தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டது. நாடகம், நடனம் மற்றும் பேச்சு மூலமாக மாணவர்கள் தீபாவளித் திருநாளின் சிறப்புகளை எடுத்துக் கூறினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அலுவலர் வினோத் குமார் அவர்கள் கலந்து கொண்டு சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற நான்காம் வகுப்பு மாணவர்கள் நிதிஷ் மற்றும் ரித்தீஷ் ஆகியோருக்குப் பதக்கம் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பெற்றோர்களின் பங்களிப்பைப் பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு பாராட்டினார். பள்ளியின் முதல்வர் கணேஷ் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Next Story