ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முன்பு வாயில் முழக்க போராட்டம்..
Rasipuram King 24x7 |25 Oct 2024 1:47 PM GMT
ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முன்பு வாயில் முழக்க போராட்டம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆனது செயல்பட்டு வருகிறது.கல்லூரியில் மாற்றுப் பணியில் பணி புரியும் அண்ணாமலை பல்கலைக்கழக மிகைப் பேராசிரியர்கள் அரசு கல்லூரியிலேயே நிரந்தரமாக பணியாற்றுவதை கண்டித்தும், அரசு கல்லூரிகளில் மிகைப் பேராசிரியர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டால் அது சமூக நீதிக் கொள்கைக்கு எதிராக அமைந்துவிடும் என்பதாகவும், அண்ணாமலை பல்கலைக்கழக மிகைப் பேராசிரியர்களை அரசு கல்லூரியில் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அரசு கல்லூரி நுழைவாயில் முன்பு வாயில் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டமானது தமிழ்நாடு ஆசிரியர்கள் கழக தலைமை மாநில பொறுப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது..
Next Story