மருத்துவக் கல்லூரி முன்பு நிறுத்திய டூவீலரை களவாடிய நபர் கைது. காவல்துறை நடவடிக்கை.
Karur King 24x7 |25 Oct 2024 3:11 PM GMT
மருத்துவக் கல்லூரி முன்பு நிறுத்திய டூவீலரை களவாடிய நபர் கைது. காவல்துறை நடவடிக்கை.
மருத்துவக் கல்லூரி முன்பு நிறுத்திய டூவீலரை களவாடிய நபர் கைது. காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம், குளித்தலை, பணிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் விஷால் வயது 20. இவர் அக்டோபர் 24ஆம் தேதி காலை 10 மணி அளவில், கரூர், காந்திகிராமம் பகுதியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனது டூவீலரில் வந்தவர், மருத்துவமனையின் டூ வீலர் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். பின்னர் தனது பணியை முடித்துவிட்டு மீண்டும் டூவீலர் நிறுத்திய இடத்துக்கு வந்து பார்த்தபோது, அவரது வாகனம் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே, இது குறித்து காவல் நிலையத்தில் தனது டூவீலரை காணவில்லை என புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக, திருச்சி மாவட்டம், உறையூர், வெக்காளியம்மன் கோவில் அருகே வசித்து வரும் கண்ணன் வயது 27 என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் விஷாலின் வாகனத்தை களவாடி சென்றது தெரியவந்து. உடனே அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும்,இது தொடர்பாக கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து, நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story