சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா.

ஆரணி, அக் 25. ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றியுள்ல பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட கலைத்திருவிழா நடைபெற்றது.
ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2024- 2025 கல்வியாண்டிற்கான குறு வள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டியை பள்ளி தலைமையாசிரியர் முருகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் சேவூர் எம்.டி பள்ளி, சேவூர் தொடக்கப்பள்ளி, பி.ஆர்.நகர் தொடக்கப்பள்ளி, இராட்டிணமங்கலம் தொடக்கப்பள்ளி, கருணாகரம்பட்டு, ஒண்டிகுடிசை தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, நடன போட்டி, களிமண் பொம்மை செய்தல், ஆங்கில பேச்சு போட்டி ஆகியவை நடைபெற்றது. மேலும் இதில் சேவூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமார், இராட்டிணமங்கலம் தலைமையாசிரியர் சிவகுமார், சேவூர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாதேவன், சேவூர் தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை்த்தலைவர் ராமலிங்கம், சேவூர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு தலைவர் பூங்கொடி, சேவூர் தொடக்கப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைதேவி மற்றும் 10 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் மேலும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Next Story