விஸ்வநாதபுரியில் சட்டவிரோத மது விற்பனை. பெண் உள்பட இரண்டு பேர் கைது.
Karur King 24x7 |26 Oct 2024 10:53 AM GMT
விஸ்வநாதபுரியில் சட்டவிரோத மது விற்பனை. பெண் உள்பட இரண்டு பேர் கைது.
விஸ்வநாதபுரியில் சட்டவிரோத மது விற்பனை. பெண் உள்பட இரண்டு பேர் கைது. கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதபுரி பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அக்டோபர் 25ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து 12:30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் விஸ்வநாதபுரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது விஸ்வநாதபுரி எம்ஜிஆர் நகரை சேர்ந்த கோவிந்தராஜ் வயது 58, அண்ணா நகரை சேர்ந்த சித்ரா வயது 50 ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 26 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க.பரமத்தி காவல்துறையினர்.
Next Story