கட்டளை- மாயனூர் சாலை சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி.

கட்டளை- மாயனூர் சாலை சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி.
கட்டளை- மாயனூர் சாலை சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மாயனூர் பகுதியில் இருந்து கட்டளை செல்லும் சாலை மிகக்குறுகியதாக உள்ளது. மேலும், தற்போது சாலைகள் ஆங்காங்கே சேதம் அடைந்து உள்ளதால் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையின் ஒருபுறம் மாயனூர் கதவுணையில் தேக்கப்படும் நீர் சூழ்ந்துள்ளது. மறுபுறம் விளைநிலங்களுக்கான வடிகால் வாய்க்கால் உள்ளது. மேலும், இப்பகுதியில் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் உள்ள நீர்த்தேக்க கிணறுகளுக்கு தண்ணீர் எடுப்பதற்காக லாரி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் கட்டளை முதல் மாயனூர் வரை, ரங்கநாதபுரம், கீழ மாயனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பகலிலேயே அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் டூவீலரில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story