ராசிபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்.

ராசிபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்.
ராசிபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(35) இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வரும் நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் புதுச்சத்திரம் அருகே வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.அப்போது ராசிபுரம் அடுத்த காட்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென்று சாலையில் நின்றதால் இறங்கிப் பார்த்த பிரகாஷ் இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வருவதை கண்டு வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி உள்ளார்.திடீரென இருசக்கர வாகனத்தில் தீப்பற்றிக் கொண்டது.பின்னர் பிரகாஷ் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வருவதற்குள் இருசக்கர வாகனம் முழுவதும் தெரிந்து நாசமாகியது. பின்னர் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சு அடித்து இருசக்கர வாகனத்தை மீட்டனர். சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...
Next Story