தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தென்காசி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன் தலைமையிலும் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில் வரும் நவம்பர் 27ம் தேதி முதல் தமிழ்நாடு துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஏழைகளின் ஊருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யு எஸ் டி. சீனிவாசன், தங்கவேலு உள்ளிட்ட வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story

