அப்புராயர் சத்திரம் இட குடியிருப்பு வாசிகள் அறநிலையத்துறை அதிகாரியிடம் மனு

X
Komarapalayam King 24x7 |3 Dec 2024 6:20 PM ISTகுமாரபாளையம் அப்புராயர் சத்திரம் இட குடியிருப்பு வாசிகள் அறநிலையத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகாவிற்குட்பட்ட குமாரபாளையம் நகர காவேரிக்கரை அப்புராயர் சத்திரத்தில் நான்கு தலைமுறைகளாக வீடு கட்டி வசித்து வரும் 19வது வார்டுக்குட்பட்ட 184 குடும்பத்தினரை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மேற்கோள் காட்டி, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது சம்பந்தமாக பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நிவாரணம் வேண்டி, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆற்றல்மிகு அண்ணன் மதுரா செந்தில் ஆலோசனையின்படி, இன்று ஈரோடு மாவட்ட இந்து அறநிலைதுறை இணை இயக்குனர் பரஞ்சோதி வசம், 184 குடும்பத்தினரின் சார்பாக குமாரபாளையம் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க மாநில செயலர் பிரபாகரன் தலைமையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வேண்டி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
Next Story
