பெண்ணை குத்தி கொலை செய்தவர் பலி

பெண்ணை குத்தி கொலை செய்தவர் பலி
X
பலி
திருக்கோவிலூர் அருகே விதவை பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன் பூச்சி மருந்து குடித்து இறந்தார். விழுப்புரம் அடுத்த நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் மனைவி சத்யா, 28; கணவரை இழந்த இவர் தனது மகன் ஹரிகரன், 11; மகள் புவனா, 3; ஆகியோருடன் திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டியில் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சத்யாவின் மகன் ஹரிகரன் ஏரியில் மூழ்கி இறந்தார். நேற்று முன்தினம் மணம்பூண்டி, தெய்வீகன் தெருவில் ஒரு வீட்டில் சத்யா வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு ஸ்கார்பியோ காரில் வந்த சத்யாவின் நெருங்கிய உறவினரான திருப்பாலபந்தனை சேர்ந்த முருகன், சத்யாவை தன்னுடன் வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த முருகன் தான் வைத்திருந்த கத்தியால் சத்யாவின் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, முருகன் காரில் ஏறி தப்பினார். ரத்த வெள்ளத்தில் துடித்த சம்பவ இடத்திலேயே இறந்தார். அப்பகுதி மக்கள் காரை துரத்தவே கட்டுப்பாட்டை இழந்த கார் மணம்பூண்டி, போக்குவரத்து கழக பணிமனை அருகே மின்கம்பத்தில் மோதி நின்றது. முருகன் காருக்குள்ளேயே மயங்கி கிடந்தார். தகவல் அறிந்த அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் முருகனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே பூச்சி மருந்து குடித்து இருப்பதாக தெரிவித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை 2:30 மணி அளவில் இறந்தார். கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த முருகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Next Story