விக்கிரவாண்டி அருகே ஆற்றில் மூழ்கிய விவசாயி உடல் மீட்பு

விக்கிரவாண்டி அருகே ஆற்றில் மூழ்கிய விவசாயி உடல் மீட்பு
X
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 35; விவசாயி. இவர், நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணி யளவில் தனது மகன் சுதேஷுடன், 14; தனது நிலத்திற்கு சென்று வீடு திரும்பும் போது சங்கராபரணி ஆற்றை கடந்தனர்.அப்போது ஆற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். உடன், அங்கிருந்தவர்கள் சுதேைஷ மீட்டனர்.இந்நிலையில், ஆற்றில் ஸ்ரீகாந்த் உடலை தீயணைப்பு வீரர்கள் நேற்று மீட்டனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story