ஜீயர் பிரம்ம ரத வீதியுலா

X
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசீக ஏகாதசியை முன்னிட்டு பிரம்ம ரத விழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் விஸ்வரூப தரிசனம், 4:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் பாண்டிய மண்டபத்தில் எழுந்தருளி விசேஷ பூஜைகள், ஜீயர் தேகளீச ராமானுஜாச்சார்யார் கைசிக புராணம் வாசித்தார். தொடர்ந்து 9:00 மணிக்கு பிரம்ம ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

