சோழகங்கம் ஏரியை தூர்வாரிட தன்னார்வ அமைப்புகளுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை

சோழகங்கம் ஏரியை தூர்வாரிட தன்னார்வ அமைப்புகளுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை
X
சோழகங்கம் ஏரியை தூர்வாரிட தன்னார்வ அமைப்புகளுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அரியலூர், டிச.16 - அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டம் சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியை தூர்வாரிட தன்னார்வ அமைப்புகளுக்கு அனுமதி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம், சமூக ஆர்வலர் அசாவீரன்குடிகாடு ஆசிரியர் இராவணன் திங்கள்கிழமை மனு அளித்தார்.அவர் அளித்த மனுவில், மாமன்னர் ராஜேந்திர சோழன் வெட்டிய சோழகங்கம் ஏரி தற்போது தூர்ந்து போய் உள்ளது. இதனை 7 அடிக்கு வெட்டி ஆழப்படுத்திட தன்னார்வ அமைப்புகள் தயராக உள்ள நிலையில் ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் ஆழப்படுத்திய பிறகு, இந்த ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுத்து, சுற்றுலா தலமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story