காவிரி பாலத்தில் பக்கவாட்டில் அமர்ந்து மது குடித்த ஐவருக்கு தோப்புகரணம் தண்டனை

X
Komarapalayam King 24x7 |16 Dec 2024 6:12 PM ISTகாவிரி பாலத்தில் பக்கவாட்டில் அமர்ந்து மது குடித்த ஐவருக்கு தோப்காபுகரணம் தண்டனை குமாரபாளையம் போலீசார் வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பழைய காவிரி பாலத்தின் மையப்பகுதியில் உள்ள இரும்பு பாலத்தின் பக்கவாட்டில் உள்ள இரும்பு பைப் மீது அமர்ந்து, எந்நேரமும் கீழே விழும் அபாயத்தில் ஐந்து நபர்கள் மது குடித்துகொண்டிருந்தனர். இது குறித்து பொதுமக்கள் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தனர். நேரில் சென்ற போலீசார், அவர்களை மேலே வரவழைத்து, பாலத்தின் மீது, பொதுமக்கள் முன்பு, தோப்புக்கரணம் போட வைத்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் பொதுமக்கள் போலீசாரை பாராட்டினர்.
Next Story
