வெள்ள நிவாரணம் கேட்டு மேல் சேவூர் கிராம மக்கள் சாலை மறியல்

X
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அடுத்த மேல் சேவூர் கிராம பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் வெள்ள நிவாரணம் கேட்டு நேற்று காலை 9:00 மணிக்கு செஞ்சி - ரெட்டணை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த செஞ்சி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மறியல் நடத்தியவர்களிடம் கலெக்டரிடம் பேசி நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தனர்.இதையடுத்து 9:40 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story

