கொங்கு மண்டல நூல் முறுக்கும் உற்பத்தியாளர் சங்கத்தின் நான்காவது பொதுக்குழு கூட்டம்

X
Komarapalayam King 24x7 |17 Dec 2024 7:34 PM ISTகொங்கு மண்டல நூல் முறுக்கும் உற்பத்தியாளர் சங்கத்தின் நான்காவது பொதுக்குழு கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொங்கு மண்டல நூல் முறுக்கும் உற்பத்தியாளர் சங்கத்தின் நான்காவது பொதுக்குழு கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது. சங்க தலைவர் செந்தில்ராஜா தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள்,மற்றும் சங்க உறுப்பினர்கள் நாமக்கல்,ஈரோடு, சேலம்,திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 200 பேர் பங்கேற்றனர். மின் கட்டண உயர்வு பற்றியும், குறைந்தபட்ச கூலி உயர்வு பற்றியும், தொழிலாளர்கள் ஊதிய உயர்வு நிலவரம் ஆகியவை பற்றியும் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயலாளர் லோகநாதன், பொருளாளர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
