விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் மின் கம்பங்கள்

X
Komarapalayam King 24x7 |17 Dec 2024 7:39 PM ISTகுமாரபாளையத்தில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் மின் கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் இடைப்பாடி சாலை, தனியார் மில் அருகில், புதியதாக மின் மாற்றி அமைக்க, மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோரம் அமைக்கப்பட்ட இந்த மின் கம்பங்கள் விபத்து அபாயம் ஏற்படுத்துவதாக உள்ளது. அதிக வாகன போக்குவரத்து உள்ள இந்த சாலையில், சாலையோரம் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இதனை அகற்றி, பாதுகாப்பான முறையில் மின்கம்பங்கள் அகற்ற வேண்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
