உடுமலை :மகளிர் கல்லூரி முதல்வரிடம் நேரில் வாழ்த்து

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில், அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் .S.A.I. நெல்சன் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி , உடுமலைப்பேட்டை முனைவர் ப.கற்பகவல்லி முதல்வர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தொடர்ந்து எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்தும்,ஏழை எளிய மக்களுக்கு செய்து வரும் சமூக சேவைகள் குறித்து எடுத்து கூறி வாழ்த்து பெற்றார். உடன் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சே.மகேஸ்வரி, முனைவர் வடிவுக்கரசி மற்றும் முனைவர் மு.கஜலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

