வீட்டு மனைப் பட்டா கேட்டு இருளர் இன மக்கள் மனு அளிப்பு

வீட்டு மனைப் பட்டா கேட்டு இருளர் இன மக்கள் மனு அளிப்பு
X
அரியலூர் அருகே வீட்டு மனைப் பட்டா கேட்டு இருளர் இன மக்கள் மனு அளிக்கப்பட்டது.
அரியலூர், டிச.23 - அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் அருகேயுள்ள வெளிச்சங்குடியில் வசிக்கும் இருளர் இன மக்கள் 41 பேர், தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட துணைச் செயலர் டி.தண்டபாணி, கிளைச் செயலர் பெரியசாமி உள்ளிட்டோர் தலைமையில் அவர்கள் அளித்த மனுவில், வெளிச்சங்குடியில் 80}க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். தினக் கூலி செய்து அன்றாட பிழைப்பு நடத்தி வரும் எங்களுக்கு, குடியிருக்க வீட்டு மனைகள் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே ஆட்சியர் கருணை அடிப்படையில் எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story