மகிமைபுரம் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்

மகிமைபுரம் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
X
ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரியலூர் நவ.23- அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் அறிவுறுத்தலின் பேரில் மகிமைபுரம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பள்ளி மாணவர்களிடம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகள் பற்றி சிறப்புரையாற்றினார். மாணவ மாணவிகள் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் பெற்றிருக்க வேண்டும், வாகனத்திற்கு இன்சூரன்ஸ் அவசியம் இருத்தல் வேண்டும், இருசக்கர வாகனத்தில் 3 பேர் ஏறிச் செல்லுதல் கூடாது, இருசக்கர வாகனத்தில் ஓட்டிச் செல்லும் போது அவசியம் திரும்பும் முன் இண்டிகேட்டர் போட வேண்டும், சைக்கிள்களில் செல்வதாக இருந்தால் எந்த திசையில் செல்கிறோம் என்பதற்கான கை சைகை செய்ய வேண்டும், முக்கியமாக வாகனம் ஓட்டும் போது மது அருந்தி வாகனம் ஓட்டுதல் கூடாது, மாணவ மாணவிகள் பஸ்ஸில் செல்வதற்காக பேருந்தில் இருந்து கூட்டமாக ஓடிச்சென்று பஸ்ஸில் முண்டியடித்து ஏறக்கூடாது, மேலும் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் பலமுறை தவறி விழுந்து உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை தவிர்க்க வேண்டும் மற்றவர்கள் படியில் நின்றால் கூட மாணவர்களாகிய நீங்கள் படியை விட்டு பஸ்ஸில் உள்ளே செல்ல அறிவுறுத்த வேண்டும். அனைவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் மற்றவர்களுக்கும் சாலை விதிகள் பற்றி விழிப்புணர்வை மாணவர்களாகிய நீங்கள் ஏற்படுத்த வேண்டும். என வலியுறுத்தி பேசினார்.
Next Story