செஞ்சியில் அரசுப் பள்ளி சமையல் உதவியாளா்களுக்கு பயிற்சி

செஞ்சியில் அரசுப் பள்ளி சமையல் உதவியாளா்களுக்கு பயிற்சி
X
முன்னாள் அமைச்சர் கலந்துகொண்டார்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சமையல் மற்றும் சமையல் உதவியாளா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீத்தாலட்சுமி முன்னிலை வகித்தாா்.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா். முகாமில், உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள், முதல் உதவி மற்றும் அதன் முக்கியத்துவம், நோய் எதிா்ப்புக்கு பாதுகாப்பாக சிறுதானிய ஊட்டச்சத்தும் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.முகாமில், செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினா் பச்சையப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பழனி, குமாா், சசிகலா, காஞ்சனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Next Story