விழுப்புரம் கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

விழுப்புரம் கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டம்
X
கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டம்
ஆங்கில புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், கிறிஸ்துவர்கள் பலர் பங்கேற்றன்ர.நேருஜி சாலையில் உள்ள வீரவாழி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கிழக்கு பாண்டி ரோடு தேவநாதசுவாமி நகர், ரயில்வே குடியிருப்பு உட்பட பல பகுதிகளில் பொதுமக்கள் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடி வரவேற்றனர்.
Next Story