கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

X
திருவானைக்கா கொள்ளிடம் ஆற்றின் நடுவே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை ஸ்ரீரங்கம் போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். திருவானைக்கா பகுதி கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் ரயில்வே டிராக் அருகே சுமாா் 50 வயதுள்ள வேஷ்டி சட்டை அணிந்திருந்த ஆண் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸாா் அந்தச் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவா் யாா் என விசாரிக்கின்றனா்
Next Story

