புளியம்பட்டி நாகராட்சியுடன் நொச்சிக்குட்டை, நல்லூர் ஊராட்சிகளை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
புளியம்பட்டி நாகராட்சியுடன் நொச்சிக்குட்டை, நல்லூர் ஊராட்சிகளை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புளியம்பட்டி நகராட்சியுடன் நொச்சி குட்டை,நல்லூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளை இனைக்கக் கூடாது எனவும்,அவ்வாறு இணைக்கும் பட்சத்தில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு கிடைக்காது எனவும், வீட்டு வரி குடிநீர் ஆகியவை அதிகமாக கட்ட வேண்டி வரும் என்றும், நல்லூர் நொச்சிகொட்டை ஆகிய இரண்டு ஊராட்சிகள் மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி மனு கொடுத்தனர். இதில் 2 ஊராட்சிகளையும் சேர்ந்த ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
Next Story



